11
Reading Mode
நேரகட்டுப்பாட்டை மீறி ஊருக்குள் சென்ற கனிமவள வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை??
ZERO ACCIDENT KUMARI என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் IPS அவர்கள் விதிமுறைகளை மீறும் கனிமவள வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்த உத்தரவின் படி நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.லலித்குமார் IPS அவர்கள் மேற்பார்வையில் நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில்,
நேரக் கட்டுப்பாட்டை மீறியும் முறையான போக்குவரத்து விதிகளை பின்பற்றாமலும் மாநகரக்குள் நுழைந்த கனிமவள வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Customize Text:
Font Color: