42
Reading Mode
அரியலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் குணசேகரனுக்கு, சிறந்த சேவைக்கான வீர திருமகன் விருது வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறை அலுவலகத்திற்கு வரும் புகார் மனுக்களை பெற்று உடனடியாக அதை எந்த துறைக்கு அனுப்ப வேண்டுமோ அந்த துறைக்கு அனுப்பி புகார் கொடுக்க வரும் நபர்களிடம் கனிவோடு நடந்து கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளையும், ஆலோசனையையும் வழங்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது பற்றி பேசிய குணசேகரன் இது போன்ற விருதுகள் தன்னை மேலும் சிறப்பாக செயல்பட ஊக்கம் அளிப்பதாகவும்,தனது இறுதி மூச்சு வரை மக்கள் சேவையை தொடர்ந்து செய்வதே தனது லட்சியம் என்றும் காவல் பணியை பெரிதும் மதித்து நேசிப்பதாகவும் கூறினார். இந்த விருதானது நேதாஜியின் இந்திய தேசிய புரட்சி படையின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
Customize Text:
Font Color: