காலியான அலமாரி
கல்யாண போட்டோவில்
கச்சிதமாய்ப் பொருந்தி நின்றோம்…
வாழ்க்கை போட்டோவில் மட்டும்
என்னை மட்டும் crop செய்துவிட்டாய்.
கழுத்தில் நீ போட்ட மாலை
பூக்களால் இல்லை,
பொய்களால் ஆனது என்பது
எனக்குப் பின்னர்தான் புரிந்தது.
⸻
புது வீடு என்பதால்
உன் மௌனம் என்றிருந்தேன்…
அது வேறொருவருக்கான
waiting call எனத் தெரியாமலே போனேன்.
தோழிகளுடன் அரட்டை என
சிரிப்பை ரசித்திருந்தேன்…
உன் சிரிப்பின் ரிங்டோன்
வேறு யாருக்கோ ஒலித்திருக்கிறது.
⸻

உனக்காக உன் வீட்டாரிடம்
வாதாடிய ஒவ்வொரு நொடியும்…
நீ அவர்களோடு சேர்ந்து
எனக்கெதிராய் ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறாய்.
உன்னை protect செய்ய நினைத்தது
என் முட்டாள்தனம்…
நீயோ அவர்களுடன் ஏற்கெனவே
ஒரு team-ஆக இருந்திருக்கிறாய்.
⸻
நீ போனதும்
பாதி நிறைந்த உன் அலமாரியைப் பார்த்து,
உன் கோபமும் பாதியில் தீர்ந்துவிடும்
எனக் காத்திருந்தேன்.
திரும்பி வருவாய் எனத் திறந்தே வைத்திருந்தேன்
என் வீட்டுக் கதவை…
தபால்காரன் மட்டும் தந்து சென்றான்
உன் divorce நோட்டீஸை.
⸻
இப்போது
என் பெயருக்கும் உன் பெயருக்கும் நடுவில்
காதல் இல்லை…
வக்கீல் அனுப்பிய வார்த்தைகளின்
காகித வாசம் மட்டும்.
⸻
எல்லா உண்மைகளும்
கொஞ்சம் லேட்டாகத்தான் தெரியவருகிறது.
வேறொருவரின் story-ல் guest role செய்ய,
என் life-ஐ audition எடுத்திருக்கிறாய்.
Society-யின் கௌரவத்தைக் காப்பாற்ற
ஒரு software போல
என் வாழ்க்கையை install செய்து
uninstall செய்துவிட்டார்கள்.
⸻
இன்று உன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில்
நீ தேவதை, அவன் ராஜகுமாரன்.
உங்கள் நண்பர்களின் inbox-ல்
நானோ ஒரு வேண்டாத bad comment.
⸻

✨
டிகிரி வாங்கியும் முட்டாள் ஆனேன்…
உன் பொய்யை உண்மை என நம்பிய
ஒரே காரணத்தால்.
Download செய்யும் முன் யோசித்திருக்க வேண்டும்…
அன்பையும், நம்பிக்கையையும்.
⸻
நீ உன் வாழ்க்கையின்
அடுத்த level-க்குச் சென்றுவிட்டாய்.
நானோ இன்னும் முதல் level-லிலேயே
hang ஆன system போல நின்றுவிட்டேன்.
சிரிக்கவும் முடியவில்லை…
அழவும் முடியவில்லை…
மூச்சு மட்டும் விடுகிறேன்,
உயிருடன் இருப்பதற்கான
ஒரு notification போல.
வலிகள் / வரிகள்
ராஜவர்மன்