மாணவர்களுக்கு சாதியுடன் அடையாள அட்டை ! முனைவர் ஏ.‌ ரபீக் கண்டனம் !!?

by ஆசிரியர்
Reading Mode

மாணவர்களுக்கு சாதியுடன் அடையாள அட்டை ! முனைவர் ஏ.‌ ரபீக் கண்டனம் !!?

சாதியை குறிப்பிட்டு மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது சமூக நீதிக்கு எதிரானது – தேசிய சட்ட உரிமை பாதுகாப்பு கவுன்சில் சேர்மன் முனைவர் ஏ.ரபீக் கடும் கண்டனம்

தமிழ்நாடு அரசும் பள்ளிக்கல்வித் துறையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளில் சாதி விவரங்களை இடம்பெறச் செய்யும் நடைமுறை சமூக நீதி, சமத்துவம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது என தேசிய சட்ட உரிமை பாதுகாப்பு கவுன்சில் சேர்மன் முனைவர் ஏ.ரபீக் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“பள்ளிகள் என்பது அறிவை வழங்கும் இடங்கள் மட்டுமல்ல; மாணவர்களிடையே சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் மனிதநேயப் பண்புகளை வளர்க்கும் உயரிய கல்வி நிலையங்களாகும். இவ்வாறான சூழலில், மாணவர்களின் அடையாள அட்டைகளில் சாதி விவரங்களை வெளிப்படையாக குறிப்பிடுவது, மாணவர்களிடையே தேவையற்ற பாகுபாடு, மன உளைச்சல் மற்றும் சமூகப் பிரிவினைக்கு வழிவகுக்கும் அபாயத்தை உருவாக்குகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமையையும், சம வாய்ப்பையும் உறுதி செய்கிறது. கல்வி நிறுவனங்கள் சாதி, மதம், இனம் உள்ளிட்ட எந்த அடிப்படையிலும் பாகுபாடு இல்லாத சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு கொண்டுள்ளன. ஆனால், அடையாள அட்டைகளில் சாதி விவரங்களை இடம்பெறச் செய்வது அந்த அடிப்படை நோக்கத்திற்கு முரணான செயலாகும்.

சிறுவயதிலேயே மாணவர்களின் மனதில் சாதி அடையாளத்தை வலுப்படுத்தும் எந்த நடவடிக்கையும் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். கல்வி நிலையங்களில் அனைவரும் சமம் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டிய நிலையில், இத்தகைய நடைமுறைகள் மாணவர்களிடையே தேவையற்ற வேறுபாடுகளையும், மனஅழுத்தத்தையும் உருவாக்கக்கூடும்.

எனவே, மாணவர்களின் நலன், சமூக ஒற்றுமை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் உயரிய நோக்கங்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசும் பள்ளிக்கல்வித் துறையும் இந்த நடைமுறையை உடனடியாக மறு பரிசீலனை செய்து, அடையாள அட்டைகளில் சாதி விவரங்களை குறிப்பிடும் முறையை திரும்பப் பெற வேண்டும்.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் சாதி, மதம், இனம் உள்ளிட்ட எந்தவித அடையாளங்களும் மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தாத வகையில் அரசு தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். கல்வி நிலையங்கள் சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் முன்னுதாரணமாக திகழும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

முனைவர் ஏ.ரபீக் மேலும் கூறுகையில், “சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதும், மாணவர்களின் மனநலன் மற்றும் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதும் அரசின் முக்கியக் கடமையாகும். கல்வி நிலையங்களில் மாணவர்கள் தங்களது திறமையின் அடிப்படையில் மட்டுமே அடையாளம் காணப்பட வேண்டும்; சாதி உள்ளிட்ட எந்த சமூக அடையாளங்களாலும் அல்ல. இதுவே உண்மையான சமூக நீதிக்கும், சமத்துவ இந்தியாவிற்கும் வழிவகுக்கும்” என்றார்.

இறுதியாக, கல்வி நிறுவனங்கள் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் மையங்களாக செயல்பட வேண்டும் என்றும், மாணவர்களிடையே எந்தவித சாதி, மத, இன வேறுபாடுகளும் வெளிப்படாத சூழலை உருவாக்க அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தேசிய சட்ட உரிமை பாதுகாப்பு கவுன்சில் சார்பில் முனைவர் ஏ. ரபீக் வலியுறுத்தியுள்ளார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00