மணப்பாறை
இளம் பெண்ணிடம் 22 லட்சம் மோசடி !வாலிபர் கைது !!?
நகைக் கடையில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி பெண்ணிடம் ரூபாய் 22 லட்சம் ஏமாற்றிய வாலிபர் கைது.
திருச்சி மாவட்டம் ,மணப்பாறை அருகே தனது நகை அடகு கடையில் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வதாகக் கூறி ஒரு இளம் பெண்ணிடம் ரூபாய் 22 லட்சம் மோசடி செய்த வழக்கில் பிரேம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார் .
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மணப்பாறை கல்லாத்துபட்டியை சேர்ந்த மகாலட்சுமி, லட்சுமி நாராயணன் நகரில் வசிக்கும் பிரேம்குமார் என்பவருடன் நட்பு கொண்டிருந்தார். பிரேம்குமார் மணப்பாறை மதுரை ரோட்டில் செல்வம் பேங்கர்ஸ் என்ற பெயரில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறார்.

மகாலட்சுமி பிரேம்குமாரிடம் அவசரத்த தேவைக்காக பணம் கொடுத்து, பெற்றுத் திரும்பி வந்துள்ளார்.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் தனது நகை அடகு கடையில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகக் கூறி பிரேம்குமார் மகாலட்சுமியிடம் ரூபாய் 25 லட்சம் பணம் கேட்டுள்ளார்.
இதனை நம்பிய மகாலட்சுமி தன்னிடமிருந்த ரூபாய் 12 லட்சம் ரொக்க பணத்தை கொடுத்துள்ளார் மீதி பணம் இல்லாததால் அவர் தனது முப்பது பவுன் நகையையும் பிரேம்குமாரிடம் ஒப்படைத்துள்ளார். பிரேம்குமார் அந்த நகையை தன் பெயரில் அடகு வைத்து 10 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக் கொண்டுள்ளார். பலமுறை கேட்டும் பிரேம்குமார் தன்னை அடகு கடையில் பங்குதாரராக சேர்த்துக் கொள்ளாததால் மகாலட்சுமி தனது பணத்தையும் நகையையும் திருப்பித் தருமாறு அவரிடம் கேட்டுள்ளார்.


ஆனால் பிரேம்குமார் பணம் மற்றும் நகையை தராமல் ஏமாற்றி வந்துள்ளார் இதனை தொடர்ந்து மகாலட்சுமி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பிரேம்குமார் மற்றும் சிதம்பரம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர் இந்த வழக்கில் தப்பி ஓடிய சிதம்பரம் என்பவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.