லக்னத்தில் ராகு/கேது நின்றால் என்ன பலன் தெரியுமா???
தனித்து வாழ்வார்.பாட்டி மீது பாசமுள்ளவர்.ஏற்கனவே மணமானவர்கள் மீது ஆசைப்படும் குணயியல்பு இருக்கும்.பெண்ணின் ஜாதகத்தில் இருந்தால் வேறோரு ஆண் மீது மோகம் கொள்ளுதல். சமூகத்திற்கு ஒவ்வாத காரியங்களை செய்ய தூண்டுதல்.
நட்புகளிடமும், உறவுகளிடமும் பிரியமான நேசம் இல்லாது பழகும் தன்மை.முறையற்ற வாழ்க்கை முறையை தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்வது. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய துணிவது.குழந்தைகள் வளர்ப்பிலும், பராமரிப்பிலும் சற்று வித்தியாசமான அணுகுமுறை.
சிறு வயதில் விடுதி வாழ்க்கை. அல்லது வயது முதிர்ந்த காலங்களில் முதியோர் இல்லங்களில் வாழ்வது, அனாதை ஆசிரம வாழ்க்கை.
ராகு கேதுக்கள் எந்த கிரகத்துடன் இணைவு பெறுகிறதோ அந்த காரக உறவுகளுக்கும், உயிர் பொருள் காரகத்திற்கும் தோஷத்தை தரும்.
மொத்தத்தில் இவர்களது வாழ்க்கை சற்றே வித்தியாசமாகத்தானிருக்கும்.
ஏனிந்த நிலை? ஏனிந்த கொடுப்பினையோடு பிறக்க நேரிடுகிறது. சற்று சிந்தியுங்கள்.
மேற்குறிப்பிட்ட பலன்கள் பொதுவானவையே, அவரவர் பிறப்பு ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைகளை பொறுத்து பலன்கள் மாறுபடும்.