39
Reading Mode
ஒவ்வொரு பெண்ணும்…
ஏதோ ஒரு ஆணின் இதயத்துக்குள்
தேவதையாகவே வாழ்கிறாள்…
அவள் முகத்தின் அழகுக்காக அல்ல,
அவள் கண்களின் மாயைக்காக அல்ல…
ஆனால் –
அவள் தரும் அன்புக்காகத்தான்.
ஒரு சின்ன சிரிப்பு…
சோர்ந்துபோன நாளையே புது விடியல் போல மாற்றிடும்.
ஒரு எளிய வார்த்தை…
மனசுக்குள் கிடக்கும் வலிகளை மறக்க வைக்கும்.
ஒரு சின்ன நம்பிக்கை…
விழுந்தவரை எழுப்பி நிறுத்தும்.
அதுதான் பெண்ணின் அன்பு.
அன்பு தான் அவள் ஆயுதம்…
அன்பு தான் அவள் அழகு…
அன்பு தான் அவள் தேவதை முகம்.
ஒரு மனிதன் வாழ்நாளில்
எந்தப் போராட்டத்தையும் வெல்ல முடியும்…
ஆனால் அவன் மனதில்
ஒரு பெண் நம்பிக்கையோடு நின்றுவிட்டால் –
அவன் உலகத்தையே வெல்ல முடியும்.
அதனால்தான்…
ஒவ்வொரு பெண்ணும்,
அவள் அன்பினால்தான்
ஒரு ஆணின் வாழ்க்கையில்
தேவதையாகிறாள்.
ராஜவர்மன்.
Customize Text:
Font Color: