மண்ணை உழுவதற்கு மனைவியை கலப்பையில் கட்டி உழுத விவசாயி !!?
கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டம் உம்னாபாத் தாலுகாவில் உள்ள ஹல்லிகேடா கிராமத்தை சேர்ந்தவர் திப் பண்ணா.
விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். காளை மாடுகள் இல்லை.
மேலும் டிராக்டர் உழவு எந்திரத்தை வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு கூட அவர்களிடம் பணமும் இல்லை.
இதனால் கணவன்,மனைவி 2 பேரும் சேர்ந்து நிலத்தை ஏர்கலப்பையால் உழுத சோக சம்பவம் நடந்துள்ளது.
அதாவது மனைவி கைகளில் கயிற்றை கட்டி இழுக்க ஏர் கலப்பையை திப்பண்ணா அழுத்தி பிடித்து நிலத்தை உழுதுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எங்களுக்கு அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை. வயிற்று பிழைப்புக்கு விவசாயம் செய்கிறோம்.
அரசு எங்க ளுக்கு உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்….