7
Reading Mode
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார் !
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வரும் நிலையில்,
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என SFI, DYFI உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் டெல்லியில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீட் முறைகேடு தொடர்பாக CBI விசாரணை நடந்து வரும் சூழலில் இந்த ராஜினாமா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Customize Text:
Font Color: