8
Reading Mode
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் திருமதி.கீதா மற்றும் தலைமை காவலர் திரு.டேவிட் ஜான் ஆகியோர், 28.01.2026 முதல் 01.02.2026 வரை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 46வது தேசிய மாஸ்டர்ஸ் அத்லெடிக் பெடரேஷன் ஆஃப் இந்தியா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் திருமதி.கீதா 2000 மீட்டர், 400 மீட்டர் hurdles ஓட்டம் ஆகிய போட்டிகளில் முதல் இடமும், 800 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்றார்.
மேலும் திரு.டேவிட் ஜான் 3000 மீட்டர் ஓட்டப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றார்.
சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்ற உதவியாளர் மற்றும் தலைமை காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் பாராட்டினார்கள்.
Customize Text:
Font Color: