மஹா சிவராத்திரியும், அதில் மறைந்துள்ள விஞ்ஞான ரகசியமும் தெரியுமா??

by ஆசிரியர்
Reading Mode

மஹா சிவராத்திரியும், அதில் மறைந்துள்ள விஞ்ஞான ரகசியமும் தெரியுமா??

ஈத்தர் எனப்படும் சக்தி தான் இந்த உலகத்தை இயக்குகிறது.

இந்த ஈத்தர் உலகம் முழுவதும், அண்டவெளி முழுவதும் நிறைந்து இருக்கிறது.

தினம் பூமியை நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்து கொண்டே இருக்கிறது.

வருடத்தில் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வருகிறது.

அந்த நாளில் ஈத்தர் சக்தி சற்று அதிகமாக இருக்கிறது.

மாசி மாத மகா சிவராத்திரி அன்று மட்டும் அபரிமிதமாக, அளவுக்கு அதிகமாக ஈத்தர் சக்தி இருக்கும்.

லூமினிபெரஸ் ஈத்தர்” (Luminiferous Eather) எனப்படும் ஒரு பிரம்மாண்ட சக்தி மகா சிவராத்திரி அன்று மட்டுமே ராக்கெட் வேகத்தில் ஸ்பிரிங் என்ற தன்மையில் பூமியை நேரடியாக வந்து இறங்கும்.

இந்த நேரத்தில் முதுகை நேராக வைத்து தூங்காமல் இருந்தால் அபரிமிதமான சக்தி கிடைக்கும்.

இதனால் பல நன்மைகள் உண்டு.

பூமி சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இதில் இரண்டு நீள்வட்ட பாதை உள்ளது.

ஓன்று சிறிய நீள்வட்டப் பாதை, மற்றொன்று பெரிய நீள்வட்டப் பாதை. பூமி பெரிய நீள்வட்டப்பாதையில் இருந்து சிறிய நீள்வட்ட பாதைக்கு மாறும் நேரம் தான் இந்த மகா சிவராத்திரி நேரம்.

ஈத்தர் சக்தி இரண்டு விதமான தன்மைகளில் பூமியை நோக்கி வரும் ஒன்று ஸ்பிரிங் (SPRING ) ,

மற்றொன்று ஃபால் ( FALL ).

இதில் ஸ்பிரிங்க்கு சக்தி அதிகம். ஃபால்க்கு சக்தி குறைவு.

மாசி மாதம் மகா சிவராத்திரியில் வரும் ஈத்தர், ஸ்பிரிங் தன்மை கொண்டது. இதற்குத் தான் அதிக சக்தி உண்டு.

ஏனென்றால் ஈத்தர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும், பூமி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றிக்கொண்டிருக்கும்.

எனவே நேரடியாக முழு சக்தியும் இந்த மகாசிவராத்திரியில் மட்டுமே கிடைக்கும்.

அதே சமயம் 180 கோண மாற்றத்தில், ஆவணி மாதத்திலும் ஈத்தர் கிடைக்கும் ஆனால் அது ஃபால் என்ற தன்மையில் இருக்கும் அதற்கு சக்தி குறைவு மேலும் பூமி சுற்றி நகரும் அதே திசையில் ஈத்தரும் பின்தொடர்ந்து வருவதால் சக்தி குறைவாக இருக்கிறது.

மகா சிவராத்திரி அன்று பூமி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்.

இந்தியாவில் நடு இரவு 12:15 AM முதல் 12:45 AM வரை உச்சகட்ட ஈத்தர் சக்தி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரியில் பகலில் சக்தி கிடைக்காதா?

பகலில் சூரிய வெளிச்சம் இருப்பதால் ஈத்தர் சக்தி சற்று குறைவாக இருக்கும். இரவில் சூரிய வெளிச்சம் இல்லாததால் சக்தி அதிகமாக இருக்கும்.

இரவு 9 மணிக்குத்தான் மெலடோனின் ( Melatonin ) என்ற ஒரு திரவம் நமது உடலில் சுரக்கும்.

மேலும் காலை 2 மணிக்குத்தான் நாம் பிரபஞ்சத்தோடு மிகவும் நெருக்கமாக இணைந்திருக்கும் நேரம்.

எனவே இரவு 9 மணி காலை 2 மணி வரை தான் அதிக சக்தி பெறும் நேரம் எனவே இரவில் கண் விழிக்கிறார்கள்.

அதை சிர்காடியன் ரிதம் என்று அழைப்பர் (Circadian Rhythm).

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00