நெல்லை மாவட்டம், சுத்தமல்லி அடுத்த நரசிங்கநல்லூர் பொன்விழா நகரை சேர்ந்த கராத்தே மாஸ்டர் அப்துல் வஹாப் இவர் டவுன் கோடீஸ்வரன் நகர் பகுதியில் கராத்தே பயிற்சி வகுப்பு மற்றும் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் பயிற்சிக்கு வரும் மாணவிகளின் தாய்மார்களிடம் செல்போன் நம்பர்களை பெற்று அப்பெண்களை தனக்கானவர்களாக ஆக்கி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த சுத்தமல்லி போலீசார் இரவோடு இரவாக கராத்தே மாஸ்டர் அப்துல் வகாப்பை கைது செய்துள்ளனர். இது போன்று தகாத சம்பவங்கள் இன்னும் வேறு எங்கும் நடந்தேறி இருக்கிறதா? என்பதை அறிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.