தாம்பரம் நகர காவல்துறையினர் தீவிர போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது 101 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
தாம்பரம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் (03/09/2025) தேதியில் காலை 08.00 மணியளவில் பெரும்பாக்கம், அரசன்காலனி ஏரி அருகே அதிரடி சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கையின் போது, ஒடிசாவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் சிபா காராவின் மகன் தனூர் ஜெய் காரா (வயது 34), பைகுடா, பட்பதேர், மல்காங்கிரி, ஒடிசா.மற்றும் பால்ராம் கிலாவின் மகன் கமல்லைசன் கிலா (வயது 24), ஆண்ட்ராபள்ளி, தகட்பதேர், டாக்கா, சித்ரகொண்டா, மல்காங்கிரி, ஒடிசா ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து மொத்தம் 101 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒடிசாவிலிருந்து கஞ்சாவை வாங்கி, பெரும்பாக்கம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு சில்லறை விற்பனை செய்வதற்காகக் கொண்டு வந்திருப்பது தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் இருவரும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம் நகர காவல்துறை சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தைத் தடுக்க தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகரத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், பொதுமக்களை, குறிப்பாக இளைஞர்களை, போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கவும் அவர்கள் தொடர்ந்து முயற்சிக்கும் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையால் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு, சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.