41
Reading Mode
கயத்தாறில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு இந்திரா நகரைச் சேர்ந்த பாரதி மகன் சின்னத்துரை (வயது26). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான இவர்,15 வயது சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட புகாரின்பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சின்னத்துரையை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Customize Text:
Font Color: