ராணிப்பேட்டை மாவட்டத்தில் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா, ஐஏஎஸ்., தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நமது இந்தியா சுதந்திரம் அடைந்ததை, நாடு முழுவதும் 79-வது சுதந்திர தின விழாவினை நாம் அனைவரும் பெரு மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறோம். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா, ஐஏஎஸ்., மூவர்ண தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய வாலஜா காவல் நிலைய ஆய்வாளர் சாலமோன் ராஜாவைப் பாராட்டி நற்சான்றிதழ்களை ஆட்சியர் சந்திரகலா ஐஏஎஸ்.வழங்கினார். விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், ஐபிஎஸ்.,மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.