37
Reading Mode
அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றப்பட்ட நஞ்ச கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், நஞ்சகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த பூபேஷ் மற்றும் அவரது சகோதரர், அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றப்பட்டனர்.
கோபியைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் கோவையைச் சேர்ந்த பிரபு ஆகியோர், தாங்கள் TNPSC ஊழியர்கள் என்று கூறி, அவர்களிடம் இருந்து சுமார் ரூ. 48.80 லட்சம் பணம் பெற்று, போலியான பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
இதில் ஏமாற்றப்பட்ட இருவர் கொடுத்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.
Customize Text:
Font Color: