திண்டுக்கல் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 2,600 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் அழிப்பு!
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை அழிக்க நீதிமன்றத்தில் காவல்துறையினர் அனுமதிகேட்டனர்.
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஆனந்தி அவர்கள், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் முன்னிலையில் காவல்துறையின் பாதுகாப்புடன் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை அழிக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கலைவாணி முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் 2600 கிலோ குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களை முருகபவனத்தில் உள்ள திண்டுக்கல் மாநகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டி அழித்தனர்.