மனோபலம், உடல் பலம் பெற வேண்டுமா ! இந்த மந்திரத்தை பிரயோகம் செய்து பாருங்கள் !!?
சிலர் எதற்கெடுத்தாலும் உடனே அழுபவர்களாக,பயப்படுவர்களாக இருப்பார்கள்.
மனோபலம் இன்மையே இதற்குக் காரணம்.
கீழே சொல்லியுள்ள மந்திர பிரயோகத்தின் மூலம் அவர்களை மனோபலம் கொண்டவர்களாக மாற்ற முடியும்.
வளர்பிறை செவ்வாய்க்கிழமை விஷ்ணு அலல்து ஹனுமான் ஆலயம் சென்று அங்குள்ள ஆஞ்சநேயருக்கு கொய்யாப்பழம் ,அச்சுவெல்லம், பழங்கள் படைத்து ஹனுமனை வழிபட்டு,
அர்ச்சகரிடம் ஹனுமனின் மேனியில் பூசிய செந்தூரம் கொஞ்சம் தருமாறு வேண்டி வாங்கி அதைக் கையில் வைத்துக் கீழே உள்ள மந்திரம் ஜெபித்து நெற்றியில் பூசி வர
உடலில் மனதில் பலம் பெருகி எந்த ஒரு சூழ்நிலையையும் தைரியமாக எதிர் கொள்ளும் மனோநிலையை அடையப் பெறுவார்கள்.
மந்திரம் :-
” ஓம் ஹம் ஹனுமந்தாய வீரரூபாய நமஹ “
இந்த மந்திரத்தை அனுதினமும் சொல்லி அனுமனின் ஆசி பெற்று அவரைப் போலவே உடல் பலமும் மனோபலமும் பெற்று வாழ்வீராக.