காகத்துக்கு சாப்பாடு வைக்கும் பழக்கமும் ! நம் முன்னோர்களின் அறிவாற்றலும் !!?

by ஆசிரியர்
Reading Mode

காகத்துக்கு சாப்பாடு வைக்கும் பழக்கமும் ! நம் முன்னோர்களின் அறிவாற்றலும் !!?

காலையில எழுந்ததும் குளிச்சிட்டு, சமைச்ச சாப்பாட்டை முதல்ல காகத்துக்கு வைக்கிற பழக்கம் நம்ம ஊர்ல பல வீடுகளில் இன்னைக்கும் இருக்கு.”ஏன் காகத்துக்கு சாப்பாடு வைக்கிறோம்?” அப்படின்னு கேட்டா, “நம்மளோட இறந்துபோன முன்னோர்கள் காகத்தின் வடிவத்துல வந்து சாப்பிடுவாங்க”அப்படின்னு பெரியவங்க சொல்றதை கேட்டிருப்போம்.

ஆனா, பகுத்தறிவு பேசுற* பல பேர் இதை, “செத்தவங்க எப்படி காக்காவா வருவாங்க? இதெல்லாம் சுத்த மூடநம்பிக்கை” அப்படின்னு கிண்டல் பண்றாங்க. ஆனா, இதுக்கு பின்னாடி உலகையே காக்கும் ஒரு பிரம்மாண்டமான ‘சுற்றுச்சூழல் அறிவியல்’ (Ecological Science) ஒளிந்து இருக்கிறது..

நம்ம ஊருல வேப்பமரம், ஆலமரம், அரசமரம் இதெல்லாம் மனித குலத்துக்கு எவ்வளவு முக்கியமான மரங்கள்னு நமக்கு தெரியும். இதுங்க தான் அதிக ஆக்சிஜனை கொடுக்கும், மழையை ஈர்க்கும். ஆனா, இந்த பிரம்மாண்டமான மரங்களோட விதைகளுக்கு ஒரு பெரிய சிக்கல் இருக்கு. அந்த விதையோட மேலோடு (Outer shell) ரொம்ப ரொம்ப கடினமா இருக்கும்.அது சும்மா மரத்துல இருந்து மண்ணுல விழுந்தா, அத்தனை சீக்கிரம் முளைக்கவே முளைக்காது.

இங்கதான் காகம் உள்ள வருது!காகம் இந்த மரங்களோட பழங்களை சாப்பிடும்போது, காகத்தின் வயிற்றுல சுரக்குற ஒரு பிரத்தியேகமான அமிலம் (Stomach acid), அந்த கடினமான விதையோட ஓட்டை மென்மையாக்கிடும். அதுக்கப்புறம் காகம் போடும் எச்சத்தின் (Droppings) வழியா வெளியே வர்ற அந்த விதை, மண்ணுல விழுந்த உடனே ரொம்ப வேகமா, ஆரோக்கியமா முளைக்க ஆரம்பிக்கும்.

அதாவது, காகங்கள் இல்லைனா நம்ம ஊர்ல வேப்பமரமும், ஆலமரமும் அதிகமா முளைக்கவே முடியாது! மனித குலம் அழியாமல் இருக்க, இந்த மரங்கள் ரொம்ப முக்கியம்.இந்த இயற்கையோட மாபெரும் ரகசியத்தை பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடியே நம்ம முன்னோர்கள் தெரிஞ்சு வச்சிருந்தாங்க.

காகங்கள் மனிதர்கள் வாழும் பகுதியை விட்டு காட்டுக்கு போயிடக் கூடாது, அதுகளுக்கு தினமும் சுலபமா சாப்பாடு கிடைக்கணுங்குறதுக்காகத்தான், “உங்க முன்னோர்கள் வர்றாங்க, தினமும் சாப்பாடு வைங்க” அப்படின்னு ஒரு உணர்வுபூர்வமான (Emotional) விஷயத்தை இதுக்குள்ள பிணைத்து வச்சாங்க*. பயத்துலயும், முன்னோர்கள் மேல உள்ள பக்தியிலயும் நாம தினமும் சாப்பாடு வைப்போம், அதனால காகங்களும் வாழும், மரங்களும் வளரும் அப்படிங்கிற நம்ம தமிழர்களோட தொலைநோக்கு சிந்தனை (Vision) வேற லெவல் இல்ல?

வெறும் சடங்குனு நாம நினைச்ச ஒரு விஷயத்துக்குள்ள, ஒட்டுமொத்த பூமியையும் காப்பாத்துற சயின்ஸை ஒளிச்சு வச்சிருக்காங்க.

இனிமேல் காகத்துக்கு சாப்பாடு வைக்கும்போது, நம்ம முன்னோர்களோட அறிவாற்றலை நினைச்சு பெருமைப்படுங்க.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00