ரதசப்தமி எதற்காக கொண்டாடப்படுகிறது?? இந்த நாளில் நாம் என்ன செய்தால் நோய்கள் அனைத்தும் விலகும்???

by ஆசிரியர்
Reading Mode

ரத சப்தமி எதற்காக கொண்டாடப்படுகிறது ? இந்த நாளில் நாம் என்ன செய்தால் நோய்கள் அனைத்தும் விலகும் ?

சூரியனை வழிபட்டு பலவிதமான நன்மைகளை பெறுவதற்குரிய நாள் ரத சப்தமி ஆகும். இந்த ஆண்டு ரதசப்தமி விழா தை மாதம் 11ஆம் நாள் (25/01/2026) ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. முடிந்த வரை காலையிலேயே ரத சப்தமி வழிபாட்டினை செய்து கொள்வது சிறப்பானதாகும்.

ரதசப்தமி நாளின் சிறப்புகள் பலருக்கும் தெரிவது கிடையாது. பலவிதமான சிறப்புகளை தரும் இந்த நாள் சூரிய ஜெயந்தி என்ற பெயரிலும் கொண்டாடப்படுவது உண்டு. வழக்கமாக தை மாதத்திலேயே ரத சப்தமி விழா கொண்டாடப்படும். இந்த நாளில் சூரியனை வழிபட்டு, சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் சிறப்பானதாகும். இந்த ரத சப்தமி நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற விபரத்தை விரிவாக பார்க்கலாம்.

ரத சப்தமி எதற்காக கொண்டாடப்படுகிறது ? இந்த நாளில் நாம் என்ன செய்தால் நோய்கள் அனைத்தும் விலகும்

ரத சப்தமி :

ரத சப்தமி என்பது திருப்பதியில் விசேஷமாக கொண்டாடப்படும் ஒரு விழா என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ரற சப்தமி என்றால் என்ன? இது எதற்காக கொண்டாடப்படுகிறது? இந்த நாளில் நாம் என்ன செய்தால், எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும்? இது யாரோ குறிப்பிட்ட சிலர் மட்டும் தான் வழிபட வேண்டிய நாளா? என பலருக்கும் பலவிதமான கேள்விகள் உள்ளது. இந்த நாள் என்ன அவ்வளவு முக்கியமானதா என்று கூட சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அனைவரும் கண்டிப்பாக வழிபட வேண்டிய நாள் தான் இந்த ரத சப்தமி.

திதிகளில் ஏழாவது திதியாக வருவது சப்தமி. அதிலும் தை-மாசி மாதங்களில் வளர்பிறையில் வரக் கூடிய சப்தமி மிகவும் விசேஷமானதாகும். இதை ரத சப்தமி என்கிறோம். அதாவது சூரிய பகவான் தன்னுடைய ரதத்தை வட கிழக்கு திசையில் திருப்பக் கூடிய நாள் ரத சப்தமி ஆகும். இது சூரிய பகவானை வழிபட வேண்டிய மிக முக்கியமான நாளாகும். உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இயங்குவதற்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் வழங்கக் கூடியவர் சூரிய பகவான். ஒவ்வொரு ஆன்மாவுடனும் தொடர்புடைய இவர் தான் ஜீவாத்மாவை, பரமாத்வாவுடன் இணையச் செய்து, இறுதியாக மோட்சத்தை வழங்கக் கூடியவர். ரத சப்தமி என்பது மகாபாரதத்தில் பீஷ்மருடன் தொடர்புடைய நாள் ஆகும்.

பீஷ்ம சப்தமி :

பாரத போரின் போது போர்க்களத்தில் அம்புப் படுக்கையில் கிடந்த பீஷ்மர், தன்னுடைய உயிர் பிரிவதற்கு உத்திராயண காலம் வரும் வரை காத்திருந்தார். உத்திராயணம் காலம் வந்த பிறகும் அவரது உயிர், உடலை விட்டு நீங்காமல் இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் புரியாமல் தவித்த பீஷ்மருக்கு விளக்குவதற்காக கிருஷ்ணர் அருளால் வியாசர் அங்கு வருகிறார். அவர் தான் ரத சப்தமி வழிபாடு பற்றி பீஷ்மருக்கு விளக்குகிறார். வியாசர் சொன்னபடி பீஷ்மரும், “இந்த உடல் அதிகமான பாவங்களை சுமந்து கொண்டிருப்பதால் உயிர் பிரியாமல் உள்ளது. அதனால் என்னுடைய பாவங்கள் அனைத்தும் எரிந்து, இந்த உயிர் உடலை விட்டு நீங்கும் வகையில் அதிகமான வெப்பத்தை என் மீது பாய்ச்சி அருள வேண்டும்” என வேண்டிக் கொண்டார். அதற்குப் பிறகே அவருடைய உயிர் பிறந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

ரத சப்தமி வழிபாட்டு பலன்கள் :

தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோயால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வருபவர்கள், கொடிய நோய்களால் அகால மரணம் ஏற்படாமல் இருப்பதற்கும், நம்முடைய உடல் ஆரோக்கியம் பெற்று, வீட்டில் உள்ள வறுமை ஒழிந்து, செல்வ வளம் பெருகுவதற்கு ரத சப்தமி நாளில் சூரிய பகவானை வழிபட வேண்டும். இந்த வழிபாட்டினை அனைத்து வயதினரும் செய்வது சிறப்பானதாகும். ரத சப்தமி நாளில் புனித நீர்நிலைகளில் நீராடுவது சிறப்பானது. முடியாதவர்கள் வீட்டிலேயே எளிய முறையில் ரத சப்தமி வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.

ரத சப்தமி வழிபாட்டு முறை :

ரத சப்தமி நாளில் காலையில் எழுந்து, சூரிய உதயத்திற்கு பிறகு குளிக்க வேண்டும். இதற்காக முதல் நாளே 7 அல்லது 9 என்ற எண்ணிக்கையில் எருக்கம் இலைகளை பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது தலையில் ஒன்று, இரண்டு கண்களில், இரண்டு தோள்களில், இரண்டு முழங்கால்களில் என 7 எருக்கம் இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் மஞ்சள் கலந்த அட்சதை சிறிதளவும், அதோடு ஆண்களாக இருந்தால் சிறிது திருநீறும், பெண்களாக இருந்தால் சிறிது மஞ்சளும் வைத்து வீட்டின் குளியல் அறையில், சூரிய பகவானை மனதார நினைத்து, நம்முடைய உடலில் என்னென்ன நோய்கள் உள்ளதோ அவைகள் அனைத்தும் நீங்கி, ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு, கிழக்கு நோக்கி நின்று குளிக்க வேண்டும்.

குளித்து விட்டு வந்து வீட்டில் சூரிய ஒளி படும் இடம் அல்லது பூஜை அறையில் ரதம் போன்று கோலம் மற்றும் சூரியன் மற்றும் சந்திரனை அரிசி மாவினால் வரைய வேண்டும். பச்சரிசி, துவரம் பருப்பு, வெல்லம் ஆகியவற்றை வைத்து, சர்க்கரை்டு பொங்கல் நைவேத்தியமாக படைத்து சூரிய பகவானுக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபட வேண்டும். ஆதித்ய ஹிருதயம் தெரிந்தவர்கள் சொல்லலாம். தெரியாதவர்கள் சூரியனுக்குரிய காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபடலாம்.

சூரிய காயத்ரி மந்திரம் :

1.ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

  1. ஓம் பாஸ்கராய வித்மஹே
    திவாகராய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

குளிக்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் :

ஸப்த ஸ்ப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி!
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸூ ஜன்மஸூ
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி!
தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய!.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00