35
Reading Mode
நத்தம் அருகே குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்தபோது புழுக்களுடன் தண்ணீர் வந்ததால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
திண்டுக்கல், நத்தம் அருகே சிறுகுடி, மந்தை முன்பு ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்தபோது புழுக்களுடன் தண்ணீர் வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
அப்பகுதி பொதுமக்கள் குடிநீரில் புழுக்கள் வருவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Customize Text:
Font Color: