கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வேண்டுமா? அதற்கான வழிபாடு என்னவென்று தெரியுமா?

by ஆசிரியர்
Reading Mode

கொடுத்த பணம் திரும்ப பெற
செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த வழிபாடானது கொடுத்த பணம் மட்டுமின்றி ஒரு சில இடங்களில் நம் கைக்கு வர வேண்டிய பணம் வராமல் நிலுவையில் இருக்கும். பணம் திரும்ப பெறுவதற்கும் இந்த வழிபாடு செய்யலாம். இதை வெள்ளிக்கிழமை அன்றும் செய்ய வேண்டும்.

துர்க்கை அம்மன் வழிபாடு என்றாலே ராகு காலத்தில் தான் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் எல்லோராலும் அந்த நேரத்தில் செய்ய முடியாது அல்லவா, ஆகையால் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை காலையில் இதை செய்யுங்கள்.செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

அப்படி ஆலயம் செல்லும் முன்பு மூன்று எலுமிச்சம் பழத்தை கையில் வாங்கிக் கொண்டு செல்லுங்கள்.இந்த எலுமிச்சம் பழத்தை ஆலயத்தில் அர்ச்சகர் இடம் கொடுத்து அம்மன் பாதத்தில் வைத்து வணங்குங்கள். இப்படி வணங்கும் போது உங்களுடைய பணம் திரும்ப கிடைக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஆலயத்தை சுற்றி வந்து ஆலயத்தில் சிறிது நேரம் அமர்ந்து வழிபாடு செய்யுங்கள்.

பிறகு ஆலயத்தில் கொடுக்கும் விபூதி குங்குமம் பிரசாதத்துடன் நீங்கள் ஆலயத்திற்கு வாங்கி கொடுத்த எலுமிச்சம் பழத்திலிருந்து இரண்டை மட்டும் திரும்ப கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இந்த எலுமிச்சம் பழத்தை வீட்டிற்கு கொண்டு வந்து ஒன்றை பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

மற்றொன்றை சாறு பிழிந்து சர்க்கரை சேர்க்காமல் வீட்டில் இருக்கும் அனைவரும் பருக வேண்டும். பூஜை அறையில் வைத்த எலுமிச்சை பழம் நன்றாக காய்ந்தவுடன் எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள் இவ்வளவு தான் வழிபாடு.

இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் பொழுது நீங்கள் கொடுத்த பணம் வர வேண்டிய பணம் உங்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் பெருகும். இந்த வழிபாட்டு முறையை தொடர்ந்து செய்து வாருங்கள் நிச்சயம் நல்ல பலனை பெறலாம்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00