கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 30) இவர்களது குடும்ப சண்டையில் தங்கமணியின் வலது கை வெட்டப்பட்டது அந்த கையை பதப்படுத்தி பொள்ளாச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
பின்னர் கடந்த 21ஆம் தேதி 11:30 மணி அளவில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. மேலும், அவருடைய ரத்த அழுத்தம் ரத்த குறைபாடு சரி செய்யப்பட்டு 22ஆம் தேதி காலை 12.15 மணி முதல் மருத்துவர்கள் சிகிச்சை செய்தனர்.

மருத்துவர்கள் ஐந்து மணி 30 நிமிடம் தொடர்ந்து சிகிச்சை செய்து நான்கு நரம்புகள் 6 தசைகள் ஒரு தமனி ஒரு சிறைகள் இணைக்கப்பட்டு துண்டான கையை அவர்கள் ஒட்டி உள்ளனர்.
குறிப்பாக ஐந்தாவது நாளாக தங்கமணியின் தொடர் சிகிச்சை காரணமாக உடல் நலம் முன்னேறி வருகிறார். அவருக்கு உயிரும் கையும் காப்பாற்றப்பட்டு உள்ளது.அரசு மருத்துவமனையில் அவருக்கு இயல் முறை பயிற்சி கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
துண்டான கையை ஒட்டி உள்ள மருத்துவர்களுக்கு அரசு மருத்துவமனை சார்பிலும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பிலும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.