ஆடிப்பெருக்கில் தானமாக தர வேண்டிய பொருட்கள்: அரிசி, பருப்பு, வெல்லம், மஞ்சள், குங்குமம், தேங்காய், பழங்கள், பூக்கள், வெற்றிலை, பாக்கு, மற்றும் பிற மளிகைப் பொருட்கள் ஆகியவை தானமாக கொடுக்கலாம். மேலும், புதிய ஆடைகள், புத்தகங்கள்,எழுது பொருட்கள் போன்றவற்றையும் தானம் செய்யலாம்.
ஆடி 18 அன்று கீழே குறிப்பிட்டுள்ள 18 வகையான பொருள்களை சுமங்கலிக்கு தானம் கொடுத்தால் குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து செல்வ செழிப்பு ஏற்படும் என்பது திண்ணம்.ஆடி பதினெட்டும் தானம் கொடுக்க வேண்டிய 18பொருள்களும்.
1 ) மஞ்சள் கிழங்கு
2 ) குங்குமப்பூ
3 ) மரச்சீப்பு
4 ) ஏலக்காய்
5 ) ரவிக்கைத்துணி
6 ) கஸ்தூரி மஞ்சள்
7 ) கருகமணி
8) அரக்கு வளையல்
9 ) சந்தனம்
1 ௦ ) பாக்கு
1 1 ) பச்சை கற்பூரம்
1 2 ) லவங்கப்பட்டை
1 3 ) குங்குமம்
1 4 ) கார்போகரிசி
1 5 ) ஜாதிக்காய்
1 6 ) வெண்கடுகு
1 7 ) காதோலை
1 8 ) செந்தாமரை பூ
இவை வீட்டில் இருந்தால் மகாலட்சுமி நம் வீட்டில் வாசம் செய்வதாக அர்த்தம்.ஆனால் இவை இருககும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் . வெள்ளி,செவ்வாய் கிழமைகளில் வீடு முழுமையாகவும்,மற்ற நாட்களில் குறைந்த பட்சம் பூஜை அறையையும் சுத்தம் செய்ய வேண்டும்.இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் தம்பதிகளுக்குள் சண்டை சச்சரவு வராது.சந்தான பாக்கியம் இல்லாத பெண்களுக்கு சந்தான லட்சுமி அருள் புரிவாள்.வற்றாத செல்வத்திற்கு அதிபதியாக இருக்கலாம்.மனம் நிம்மதியாக இருககும்.
நன்றாக படிக்காத குழந்தைகள் படிப்பில் ஓரளவேனும் தேர்ச்சி பெறுவர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை இப்பொருளை மாற்றி விடவேண்டும். ஆடி பதினெட்டில் ஒரு சுமங்கலிக்கு மேற்கண்ட பொருட்களை தானமாக கொடுத்து விட்டு புதிதாக இதே பொருட்களை வாங்கி வைக்க வேண்டும். இப்படி செய்வதால் வீடு லட்சுமி கடாட்சத்துடன் சுபிட்சம் அடையும் என்பது திண்ணம்.