விநாயகருக்கு உகந்த பத்திரங்களும், அவற்றைக் கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றி பார்ப்போம்.
முல்லை இலை அறம் வளரும்
கரிசலாங்கண்ணி இலை இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
வில்வம் இன்பம். விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
அறுகம்புல் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது
இலந்தை இலை கல்வியில் மேன்மையை அடையலாம்.
ஊமத்தை இலை பெருந்தன்மை கைவரப்பெறும்.
வன்னி இலை பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.
நாயுருவி முகப் பொலிவும், அழகும் கூடும்.
கண்டங்கத்தரி இலை
வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
அரளி இலை எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
எருக்கம் இலை கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும்.
மருதம் இலை மகப்பேறு கிட்டும்.விஷ்ணுகிராந்தி இலை
நுண்ணறிவு கைவரப் பெறும்.
மாதுளை இலை பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
தேவதாரு இலை எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.
மருக்கொழுந்து இலை இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.
அரசம் இலை உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.
ஜாதிமல்லி இலை சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்
தாழம் இலைசெல்வச் செழிப்புக் கிடைக்கப் பெறும்.
அகத்தி இலை கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.