சிவனுக்கு பௌர்ணமியில் எதைக்கொண்டு அபிஷேகம் செய்தால், என்ன பலன் என்று கிடைக்கும் தெரியுமா??

by ஆசிரியர்
Reading Mode

ஒவ்வொரு மாத பெளர்ணமிக்கும் சிவபெருமானுக்கு என்று சிறப்பான அபிஷேகப் பொருள் உண்டு.

ஐப்பசி மாதத்து பௌர்ணமியில் அன்னம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது போல ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்படவேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சித்திரை பௌர்ணமி – மருக்கொழுந்து – புகழ்.

வைகாசி பௌர்ணமி – சந்தனம்- மனை, வீடு, நிலம், புதையல்.

ஆனி பௌர்ணமி – முக்கனி = மா,பலா, வாழை – கேட்ட வரம் கிட்டும்.

ஆடி பௌர்ணமி – காராம் பசுவின் பால் – பயம் நீங்கும்.

ஆவணி பௌர்ணமி – வெல்ல சர்க்கரை – சாபம் தோஷம் பாவம் நீங்கும்.

புரட்டாசி பௌர்ணமி – கோதுமை+பசுநெய் கலந்த வெல்ல அப்பம் – அஷ்ட ஐஸ்வரியம்.

ஐப்பசி பௌர்ணமி- அன்னாபிஷேகம் – கல்வி கலை தேர்ச்சி ஞானம் கிட்டும்.

கார்த்திகை பௌர்ணமி – பசு நெய், தாமரை நூல் தீபம் – பழி தீரும், வழக்கு வெற்றி.

மார்கழி பௌர்ணமி – பசு நெய் & நறுமண வென்னீர் – கண்டம் நீங்கி ஆயுள் கூடும்.

தை பௌர்ணமி – கருப்பஞ்சாறு – நோய் நீங்கி ஆரோக்கியம்.

மாசி பௌர்ணமி – பசுநெய்யில் நனைத்த கம்பளி – குழந்தை பாக்கியம்.

பங்குனி பௌர்ணமி
பசுந்தயிர்- மனைவி, மக்கள்,உறவினர் உதவி.

அன்னாபிஷேகக் காட்சி அளவற்ற இன்பம் தரக்கூடியது.
அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால், அன்னதானம் செய்த புண்ணியமும் கிடைக்கின்றது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00